ஞாயிறு, 15 நவம்பர், 2015

வரலாற்று புகழ்பெற்ற சித்தாண்டி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற கந்தசஷ்டி விசேட பூசை

(சித்தாண்டி நிருபர்)

கிழக்கு இலங்கையில் வரலாற்று சிறப்பு பெற்ற மட்டக்களப்பு சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலாயத்தில் கந்தசஷ்டி விரத்தின் நான்காவது நாளாகிய இன்று விசேட பூசை நிகழ்வுகள் அனைத்தும் யாழ் வடமராட்சி பாலசுப்பிரமணிய சிவச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

நடைபெற்று வரும் கந்தசஷ்டி விரத்தின் நாளாந்த பூசைகளில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விரத பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இன்றைய நாள் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை முடிவடைந்ததும் சூரபத்மன் ஊர்வலமாக படைசூழ சித்தாண்டி கிராமங்களிலுள்ள பல பிரிவுகளிலும் அமைந்துள்ள ஆலயங்களுக்கு சென்று மீண்டும் ஆலயத்திற்கு சென்றடைந்தது.

எதிர்வரும் செவ்வாய்கிழமை (17) முருகப் பெருமானுக்கும் சூர பத்மனுக்கும் இடையில் சூர சங்காரம் இடம்பெற்று புதன்கிழமை பாரண பூசையுடன் இனிதே நிறைவடையவுள்ளது.

வருடாந்தம் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து ஆலயத்திற்கு பக்தர்கள் வருகைதந்து இவ் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் அனுஸ்டிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate