
WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த விண் பொருள் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது எரிந்து சாம்பளாகியிருக்கலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விண்பொருள் விழக்கூடும் என எதிர்வுகூறப்பட்ட நேரத்திற்கு சுமார் 2 மணித்தியாலம் முன்பிருந்தே கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை இலங்கை விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்டிருந்தது.
எவ்வாறாயினும், குறித்த விண்பொருள் கடலில் விழவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விண்வெளி ஆய்வில் ஈடுபட்ட செயற்கைக்கோல் அல்லது ஒரு இயந்திரத்தின் பகுதி இலங்கையை அண்மித்த கடலில் விழக்கூடும் என எதிர்வுகூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக