செவ்வாய், 29 டிசம்பர், 2015

நாவிதன்வெளியில் மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மீட்பு.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் .ஏ.எல்.அலாவுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று (28) நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலுள்ள 18 உணவகங்கள் சுப்பர் மார்க்கட் போன்றன திடீர் பரிசோதனை செய்யப்பட்டது.

இப்பரிசோதனையில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்.து.மதன் கல்முனை பிராந்திய உணவு மருந்து பரிசோதகர்களான என்.தேவநேசன் , ரி.தஸ்தகீர் , மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.இளங்குமரன் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது சுமார் 60,000 ரூபா பெறுமதியான மனித பாவனைக்கு உதவாத பொருட்கள் கைப்கற்றப்பட்டு அழிக்கப்படடதாகவும் மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கல்முனை பிராந்திய உணவு மருந்து பரிசோதகர் என்.தேவநேசன் தெருவித்தார்.











Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624964

Translate