திங்கள், 21 டிசம்பர், 2015

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்களின் கூட்டுறவு கடனுதவி சிக்கன சேமிப்பு சங்கத்தின் 50வது வருடாந்த பொதுக்கூட்டம்

மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்களின் ஊழியர் கூட்டுறவு கடனுதவி சிக்கன சேமிப்பு சங்கத்தின் 50வது வருடாந்த பொதுக்கூட்டம் எல்லை வீதி சனசமூக மண்டபத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் தா.அன்டனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன் மற்றும் முன்னாள் தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் ஊழியர்களின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கமானது ஒரு ஊழியர் ஓய்வுபெற்று செல்லும்போதும் அவரின் இறுதிக்காலம் வரையில் உதவும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.

இந்த கூட்டத்தின்போது சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் சங்கத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தல் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன் 2015-16ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் நடைபெற்றதுடன் ஊழியர்களின் நலன்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.






Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624904

Translate