அட்டாளைச்சேனை அல்-மினா பாலர் பாடசாலையின் விடுகை விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் (27.12.2015) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை அந-;நூர் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
அல்-மினா பாலர் பாடசாலையின் முகாமைத்துவப் பணிப்பபளர் எம்.எல்.எம். சியாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாiலெப்பை பிரதம அதிதியாகவும் விசேட அதிதிகளாக டாக்டர் எஸ்.எம் முனாஸ்தீன், சமூக சேவையாளர் ஏ.எம் மனாஸ் மற்றும் அந்-நூர் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல் கிதுறுமுகம்மட் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது பாலர்பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகளினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் சான்றுதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக