திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீசிய மினி சூறாவளி காரணமாக 02 கடைகள் மற்றும் 06 வீடுகளின் கூரைகள் அள்ளுண்டதுடன், 02 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக காற்றுடன் மழை பெய்துவருகின்றது. இந்நிலையில், சுமார் அரை மணித்தியாலம் வரை வீசிய மினி சூறாவளியினால் விநாயகபுரம் சிவன் கோவிலை அண்டியுள்ள கடைகள் மற்றும் வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் வாழை, தென்னை, வேப்பமரங்கள் முறிந்துள்ளன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக