(எம்.எஸ்.சம்சுல் ஹாதா)
கிழக்கு மாகாண அம்பாறை பிராந்திய நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு விழா மாகாண நீர்ப்பாசன அம்பாறை பிராந்திய பணிப்பாளர் எந்திரி யு.எல்.ஏ.நசார் தலமையில் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
2016ம் ஆண்டில் இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் பொருட்டு இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் 05 வருடங்களை பூர்த்தி செய்த மற்றும் வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் வேறு திணைக்களங்களுக்கும், பிராந்திய அலுவலகங்களுக்குள்ளும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களின் அயராத சேவையினை கௌரவித்து இடம்பெற்ற நிகழ்வில் அவர்களது கடந்த கால சேவைகள் பற்றியும், திறமைகள் பற்றியும் கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிராந்திய அலுவலக பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக