புதன், 23 டிசம்பர், 2015

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் அவர்களது பெற்றோரும் இன்று கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு வாட் பிளேஸிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக நடைபெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்குமாறும், அல்லது வேறு பல்கலைக்ழகங்களுக்கு மாணவர்களை மாற்றுமாறும் வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் நடத்தப்பட்டது.
இதேவேளை நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
எனினும் இன்றைய தினம் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவு வளாகத்தினுள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624955

Translate