திங்கள், 21 டிசம்பர், 2015

தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலயத்தின் ஒளிவிழா நிகழ்வு

மட்டக்களப்பு தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலயத்தின் மறைக்கல்வி மன்றம் மற்றும் பக்தி சபையின் ஏற்பாட்டில் ஒளிவிழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலயத்தின் பங்குத்தந்தை அலக்ஸ் ரொபட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட நிதிபொறுப்பாளர் அருட்பணி இன்னாசி ஜோசப் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக சிரேஸ்ட உளநல வைத்திய நிபுணர் டாக்டர் யுடி ஜெயக்குமார் உட்பட பங்குத்தந்தையர்கள்,அருட்சகோதரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு போட்டிகளிலும் கல்வியிலும் சாதனைகள் படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாற்றம் பெற்றுச்செல்லும் அருட்சகோதரிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் ஒளிவிழாவினை குறிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் நாடக நிகழ்வுகளும் நடைபெற்றன.


















































Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate