கிழக்கு மாகாண முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட 2016ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் 16 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் இரண்டாம் நாள் வரவு -செலவுத்திட்ட அமர்வு செவ்வாய்க்கிழமை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் நடைபெற்றது.
இந்த வரவு –செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 22 பேரும் எதிராக 06 பேரும் வாக்களித்தனர். 08 பேர் அமர்வில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், கிழக்கு மாகாண சபையில் வரவு -செலவுத்திட்டம் 16 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக