தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நமது மக்களுக்கான இறுதித்தீர்வை நாங்கள் பெற வேண்டும். அதற்கு அனைவரும் அரசியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.
மட்டக்களப்பு,வாகரையில் நடைபெற்ற விவசாயிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எமது பிரதேசம் கடந்த காலங்களில் இழந்தவைகள் பல.அவற்றில் முக்கியமாக நாங்கள் கல்வியை இழந்துள்ளோம்.எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பிரதேசமும் வாகரைப்பிரதேசமும் ஒன்று.கடந்த கால போராட்டங்களில் தங்களை அர்ப்பணித்தவர்கள் இந்த பிரதேச மக்கள்.
இப்பிரதேசங்களில் மாணவர்களின் இடைவிலகள் 2009ஆம் ஆண்டுவரை இருந்தது.அந்த நிலை இன்று அதிகரித்துச்செல்வதை நாங்கள் அனுமதிக்கமுடியாது.
சாதாரண தர பரீட்சை எழுதிய நிலையிலும் 13,14வயதுகளிலும் தங்களை போராட்டங்களில் இணைத்துக்கொண்டவர்களை அதிகமாக கொண்டதாகவும் இந்த பிரதேசம் இருந்துவந்துள்ளது.பல இன்னல்களையும் பல இழப்புகளையும் இந்த பகுதிகள் சந்தித்துள்ளன.வீட்டுக்கு ஒருவரை இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் இழந்துள்ளனர்.
இந்த பிரதேசத்தினை நாங்கள் கட்டியெழுப்பவேண்டுமாகவிருந்தால் கல்வியை கட்டியெழுப்பியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.அதற்காக அரசியல்வாதிகளாகிய நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளோம்.
கல்குடா வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பலர் இன்று வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.ஆசிரியர் சேவையில் ஒரு மாற்றத்தினை கொண்டுவரவேண்டும்.தூர இடங்களுக்கு கஸ்டப்பகுதிகளுக்கு செல்லும் ஆசிரியர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யும்போது அவர்கள் எந்த இடத்துக்கு சென்றும் சேவையாற்றக்கூடிய மனநிலையை பெறுவர்.
ஆனால் கல்வித்திணைக்களத்திலும் கல்வி அமைச்சிலும் ஒரு குறைபாடு உள்ளது. ஒரு ஆசிரியர் கஸ்டப்பிரதேசத்திற்கு சென்றால் அவரின் வாழ்நாள் முழுவதும் அங்கேயே கழிக்கவேண்டும் என்ற நிலை உள்ளது.இந்த நிலையை இந்த அமைச்சும் திணைக்களமும் மாற்றுமாகவிருந்தால் கஸ்டப்பிரதேசங்களில் கடமையாற்றுவதற்கு ஆசிரியர்கள் முன்வருவார்கள்.
2008ஆம்ஆண்டு மட்டக்களப்பு நகரில் இருந்து 13 ஆசிரியர்கள் மூன்று வருடத்தின் பின்னர் விரும்பும் பகுதிக்கு அனுப்பப்படுவீர்கள் என்று தெரிவித்து அப்போதைய கல்வி பணிப்பாளரினால் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்கு மாற்றப்பட்டனர்.ஆனால் இன்றுவரையில் அவர்கள் திரும்பி வரமுடியாத நிலையில் உள்ளனர்.அந்த நிலையை மாற்றவேண்டும்.ஆசிரியர் இடமாற்றங்களை உரிய முறையில் மேற்கொண்டால் எந்த ஆசிரியரும் எங்கும் சென்று கடமையாற்ற முன்வருவார்கள்.
நாங்கள் எமது கல்வி நிலையை வளர்க்கும்போதே மாவட்டத்தில் தமிழர்களின் வளர்ச்சிலை மேலோங்கிச்செல்லும் நிலையேற்படும்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறிய காணி அபகரிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.இன்று தமிpழ் தேசிய கூட்டமைப்பானது பல வழிகளிலும் போராடவேண்டிய சூழ்நிலையேற்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் காணி அபகரிப்புகள் நிறுத்தப்படாவிட்டால் தனி தமிழ் பிரதேசமாக இருக்கும் வாகரைப்பிரதேசம் பத்து வருடத்தில் குடிப்பரம்பல் மாறும் நிலைக்கு வரும்.அதற்கு நாங்கள் இடமளிக்ககூடாது.
வன்னியிலே அமைச்சராக இருக்கும் ஒரு அரசியல்வாதி மேற்கொள்ளும் நடவடிக்கையான காணியை அபகரித்து தனது இனத்தினை குடியேற்ற நினைக்கும் அதே கைங்கரியத்தினை அவரது கட்சியை சேர்ந்த கல்குடா பகுதியை சேர்ந்த ஒரு அரசியல்வாதியும் செய்ய நினைக்கின்றார்.அதற்கு நாங்கள் இடமளிக்கமுடியாது.
இன்று வட கிழக்கிலே ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உருவாகி வருவதை நாங்கள் காண்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் அனுசரணையுடன் நான்கு கட்சிகள் சேர்ந்து உருவாக்கப்பட்டது.
அந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு, இராஜதந்திர ரீதியாக, அரசியல் ரீதியாக, மேற:குல சக்திகளின் அனுசரணையுடன் எமக்கான ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதற்கு, பெற்றுக் கொள்வதற்குப் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ் மக்கள் பேரவை என்ற ஒன்று வடக்கிலே உருவாகியிருக்கிறது.
வடக்கு மாகாண முதலமைச்சர் ஐயா விக்னேஸ்வரனையும் இணைத்தலைவராகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த தமிழ் மக்கள் பேரவை அரசியல் ரீதியானது அல்ல என்று கூறப்பட்டாலும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுப் பொதியைத் தயாரிக்கும் அமைப்பாக அது கருதப்படுகிறது. அப்படியானால் எதிர்காலத்தில் ஒரு அரசியல் சக்தியாக பரிணமிக்கும் என்பதை யாருமே ஊகித்துக் கொள்ள முடியும்.
இந்தக்காலக்கட்டத்தில் நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால் பத்திரிகைகள், ஊடகங்கள் நாங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் கூறும் கருத்துக்களை திரிவு படுத்தாமல், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்தாமல் சரியான கருத்துக்களை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை.
இன்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஐயா சம்பந்தன் இருக்கின்றார். வட மாகாண முதலமைச்சர் ஐயா விக்னேஸ்வரன் இருக்கின்றார். அண்ணன் துரைராஜசிங்கம் அவர்கள் ஒரு கூட்டத்திலே முஸ்லிம் தமிழ் சமூகங்களை இரட்டைக் குழல் கொண்ட துப்பாக்கிகள் எனக் கூறியிருந்தார் நான் இதனை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக்கூற விரும்புகின்றேன்.
ஏனென்றால் எனது கருத்து மக்கள் மத்தியில் செல்ல வேண்டும். இன்றைய பத்திரிகை ஒன்றில் எனது கருத்தைத் திருவு படுத்திக் கூறியிருக்கிறார்கள். சம்பந்தன் ஐயாவும், விக்னேஸ்வரன் அவர்களும் இரட்டைக் குழல் கொண்ட துப்பாக்கிகளாக வெடிக்க வேண்டும். சம்பந்தன் அவர்கள் தேசிய அரசியலிலே சர்வதேசத்திடம் வலியுறுத்தி எங்களுக்கொரு அரசியல் தீர்வைக் கொண்டு வர நினைக்கும் அதே நேரத்தில், விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் மாகாணங்களில் இருக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தி அவருக்கு உறுதுணையாக ஒரே நேரத்தில் வெடிக்கும் துப்பாக்கிகளாக இருந்தால் மாத்திரம் தான் எமது மக்களுக்கான சரியான விடிவு, சரியான நேரத்தில் கிடைக்கும்.
அது மாத்திரமல்ல கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 4 கட்சிகள் இருந்தும்; ஒரு சில கட்சிகளின் தலைவர்கள் கூட கடந்த தேர்தலில் தோற்றிருந்தார்கள். ஆனால் எங்களது கருத்து அவர்களையும் உள்ளெடுக்கவேண்டும்.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கூட்டமைப்புக்காக அதன் கருத்துக்களை வெளியில் கொண்டு வருபவர்களையும் வெளியில் விடாது, அவர்களையும் அரவணைத்து அவர்களது தேவைகளையும் பூர்த்தி செய்து செல்வோமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை யாருமே பிரிக்க முடியாது.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நமது மக்களுக்கான இறுதித்தீர்வை நாங்கள் பெற வேண்டும். அதற்கு அனைவரும் அரசியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும்.
மட்டக்களப்பு,வாகரையில் நடைபெற்ற விவசாயிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எமது பிரதேசம் கடந்த காலங்களில் இழந்தவைகள் பல.அவற்றில் முக்கியமாக நாங்கள் கல்வியை இழந்துள்ளோம்.எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பிரதேசமும் வாகரைப்பிரதேசமும் ஒன்று.கடந்த கால போராட்டங்களில் தங்களை அர்ப்பணித்தவர்கள் இந்த பிரதேச மக்கள்.
இப்பிரதேசங்களில் மாணவர்களின் இடைவிலகள் 2009ஆம் ஆண்டுவரை இருந்தது.அந்த நிலை இன்று அதிகரித்துச்செல்வதை நாங்கள் அனுமதிக்கமுடியாது.
சாதாரண தர பரீட்சை எழுதிய நிலையிலும் 13,14வயதுகளிலும் தங்களை போராட்டங்களில் இணைத்துக்கொண்டவர்களை அதிகமாக கொண்டதாகவும் இந்த பிரதேசம் இருந்துவந்துள்ளது.பல இன்னல்களையும் பல இழப்புகளையும் இந்த பகுதிகள் சந்தித்துள்ளன.வீட்டுக்கு ஒருவரை இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் இழந்துள்ளனர்.
இந்த பிரதேசத்தினை நாங்கள் கட்டியெழுப்பவேண்டுமாகவிருந்தால் கல்வியை கட்டியெழுப்பியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.அதற்காக அரசியல்வாதிகளாகிய நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளோம்.
கல்குடா வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பலர் இன்று வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.ஆசிரியர் சேவையில் ஒரு மாற்றத்தினை கொண்டுவரவேண்டும்.தூர இடங்களுக்கு கஸ்டப்பகுதிகளுக்கு செல்லும் ஆசிரியர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யும்போது அவர்கள் எந்த இடத்துக்கு சென்றும் சேவையாற்றக்கூடிய மனநிலையை பெறுவர்.
ஆனால் கல்வித்திணைக்களத்திலும் கல்வி அமைச்சிலும் ஒரு குறைபாடு உள்ளது. ஒரு ஆசிரியர் கஸ்டப்பிரதேசத்திற்கு சென்றால் அவரின் வாழ்நாள் முழுவதும் அங்கேயே கழிக்கவேண்டும் என்ற நிலை உள்ளது.இந்த நிலையை இந்த அமைச்சும் திணைக்களமும் மாற்றுமாகவிருந்தால் கஸ்டப்பிரதேசங்களில் கடமையாற்றுவதற்கு ஆசிரியர்கள் முன்வருவார்கள்.
2008ஆம்ஆண்டு மட்டக்களப்பு நகரில் இருந்து 13 ஆசிரியர்கள் மூன்று வருடத்தின் பின்னர் விரும்பும் பகுதிக்கு அனுப்பப்படுவீர்கள் என்று தெரிவித்து அப்போதைய கல்வி பணிப்பாளரினால் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்கு மாற்றப்பட்டனர்.ஆனால் இன்றுவரையில் அவர்கள் திரும்பி வரமுடியாத நிலையில் உள்ளனர்.அந்த நிலையை மாற்றவேண்டும்.ஆசிரியர் இடமாற்றங்களை உரிய முறையில் மேற்கொண்டால் எந்த ஆசிரியரும் எங்கும் சென்று கடமையாற்ற முன்வருவார்கள்.
நாங்கள் எமது கல்வி நிலையை வளர்க்கும்போதே மாவட்டத்தில் தமிழர்களின் வளர்ச்சிலை மேலோங்கிச்செல்லும் நிலையேற்படும்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறிய காணி அபகரிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.இன்று தமிpழ் தேசிய கூட்டமைப்பானது பல வழிகளிலும் போராடவேண்டிய சூழ்நிலையேற்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் காணி அபகரிப்புகள் நிறுத்தப்படாவிட்டால் தனி தமிழ் பிரதேசமாக இருக்கும் வாகரைப்பிரதேசம் பத்து வருடத்தில் குடிப்பரம்பல் மாறும் நிலைக்கு வரும்.அதற்கு நாங்கள் இடமளிக்ககூடாது.
வன்னியிலே அமைச்சராக இருக்கும் ஒரு அரசியல்வாதி மேற்கொள்ளும் நடவடிக்கையான காணியை அபகரித்து தனது இனத்தினை குடியேற்ற நினைக்கும் அதே கைங்கரியத்தினை அவரது கட்சியை சேர்ந்த கல்குடா பகுதியை சேர்ந்த ஒரு அரசியல்வாதியும் செய்ய நினைக்கின்றார்.அதற்கு நாங்கள் இடமளிக்கமுடியாது.
இன்று வட கிழக்கிலே ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உருவாகி வருவதை நாங்கள் காண்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் அனுசரணையுடன் நான்கு கட்சிகள் சேர்ந்து உருவாக்கப்பட்டது.
அந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு, இராஜதந்திர ரீதியாக, அரசியல் ரீதியாக, மேற:குல சக்திகளின் அனுசரணையுடன் எமக்கான ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதற்கு, பெற்றுக் கொள்வதற்குப் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ் மக்கள் பேரவை என்ற ஒன்று வடக்கிலே உருவாகியிருக்கிறது.
வடக்கு மாகாண முதலமைச்சர் ஐயா விக்னேஸ்வரனையும் இணைத்தலைவராகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த தமிழ் மக்கள் பேரவை அரசியல் ரீதியானது அல்ல என்று கூறப்பட்டாலும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுப் பொதியைத் தயாரிக்கும் அமைப்பாக அது கருதப்படுகிறது. அப்படியானால் எதிர்காலத்தில் ஒரு அரசியல் சக்தியாக பரிணமிக்கும் என்பதை யாருமே ஊகித்துக் கொள்ள முடியும்.
இந்தக்காலக்கட்டத்தில் நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால் பத்திரிகைகள், ஊடகங்கள் நாங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் கூறும் கருத்துக்களை திரிவு படுத்தாமல், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்தாமல் சரியான கருத்துக்களை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை.
இன்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஐயா சம்பந்தன் இருக்கின்றார். வட மாகாண முதலமைச்சர் ஐயா விக்னேஸ்வரன் இருக்கின்றார். அண்ணன் துரைராஜசிங்கம் அவர்கள் ஒரு கூட்டத்திலே முஸ்லிம் தமிழ் சமூகங்களை இரட்டைக் குழல் கொண்ட துப்பாக்கிகள் எனக் கூறியிருந்தார் நான் இதனை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக்கூற விரும்புகின்றேன்.
ஏனென்றால் எனது கருத்து மக்கள் மத்தியில் செல்ல வேண்டும். இன்றைய பத்திரிகை ஒன்றில் எனது கருத்தைத் திருவு படுத்திக் கூறியிருக்கிறார்கள். சம்பந்தன் ஐயாவும், விக்னேஸ்வரன் அவர்களும் இரட்டைக் குழல் கொண்ட துப்பாக்கிகளாக வெடிக்க வேண்டும். சம்பந்தன் அவர்கள் தேசிய அரசியலிலே சர்வதேசத்திடம் வலியுறுத்தி எங்களுக்கொரு அரசியல் தீர்வைக் கொண்டு வர நினைக்கும் அதே நேரத்தில், விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் மாகாணங்களில் இருக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தி அவருக்கு உறுதுணையாக ஒரே நேரத்தில் வெடிக்கும் துப்பாக்கிகளாக இருந்தால் மாத்திரம் தான் எமது மக்களுக்கான சரியான விடிவு, சரியான நேரத்தில் கிடைக்கும்.
அது மாத்திரமல்ல கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 4 கட்சிகள் இருந்தும்; ஒரு சில கட்சிகளின் தலைவர்கள் கூட கடந்த தேர்தலில் தோற்றிருந்தார்கள். ஆனால் எங்களது கருத்து அவர்களையும் உள்ளெடுக்கவேண்டும்.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கூட்டமைப்புக்காக அதன் கருத்துக்களை வெளியில் கொண்டு வருபவர்களையும் வெளியில் விடாது, அவர்களையும் அரவணைத்து அவர்களது தேவைகளையும் பூர்த்தி செய்து செல்வோமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை யாருமே பிரிக்க முடியாது.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நமது மக்களுக்கான இறுதித்தீர்வை நாங்கள் பெற வேண்டும். அதற்கு அனைவரும் அரசியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக