நபிகள் நாயகம் அவர்களது ஜனன தினத்தையொட்டி மலர்ந்துள்ள மீலாதுன்நபி தின கொண்டாட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் மிகவும் அமைதியான முறையில் சமய வைபவங்களுடன் இடம்பெற்று வருகின்றன.
காத்தான்குடி மத்ரசதுல் றஹ்மானியா ஏற்பாடு செய்த நபிகள் நாயகம் பெயரிலான மௌலீது வைபவம் மற்றும் கந்தூரி நிகழ்வுகள் அதன் தலைவர் மௌலவி றஸீன் றப்பானி தலைமையில் நடைபெற்றது.
காத்தான்குடி றப்பானியா அறபுக்கல்லூரி அதிபர் மௌலவி ஏ.எல்.அப்துல் மஜீத் றப்பானி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டதுடன், காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயலிலும் மௌலீது வைபவங்கள் இடம்பெற்றன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக