செவ்வாய், 22 டிசம்பர், 2015

மட்டு மாவட்டத்தை தாண்டி கிளிநொச்சி உறவுகளுக்கும் உதவி வழங்கிய வாசம் உதவும் உறவுகள் நிறுவனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தமிழ் தாயக மக்களுக்காக புலம்பெயர் உறவுகளின் உதவிகளை கொண்டு பல்வேறு உதவிகளை வழங்கிவரும் வாசம் உதவும் உறவுகள் நிறுவனம் கிளிநொச்சியில் யுத்தத்தினால் நலிவடைந்த மக்களுக்கு பல்வேறு உதவிப் பொருட்கள் இன்று (21) அதன் தலைவர் வே.பிரபாகரன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.



யுத்தத்தினால் பாதிப்படைந்த கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பல வறிய கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள குடும்பங்களின் நிலைமையை கேட்டறிந்ததுடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கான பெறுமதி மிக்க கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.


புலம் பெயர் உறவுகள் மற்றும் இலங்கையில் இருந்து தொழில் நிமிர்த்தம் சென்ற உறவுகளின் உதவிகளை பெற்று வறிய இம் மாணவர்களுக்கான பாடசாலை பொருட்கள் மற்றும் தாய் தந்தையாகளுக்கான உடுபுடவை என்பன  நிறுவனத்தின் உத்தியோகர்த்தர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.


கிழக்கு மாகாணத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் குறித்த நிறுவனம் வடமாகாணத்தின்  கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பல கிராமங்களுக்கு முதன் முதலாக சென்று இவ்வாறான உதவிப்பொருட்களை வழங்கிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate