யுத்தத்தினால் பாதிப்படைந்த கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பல வறிய கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள குடும்பங்களின் நிலைமையை கேட்டறிந்ததுடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கான பெறுமதி மிக்க கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
புலம் பெயர் உறவுகள் மற்றும் இலங்கையில் இருந்து தொழில் நிமிர்த்தம் சென்ற உறவுகளின் உதவிகளை பெற்று வறிய இம் மாணவர்களுக்கான பாடசாலை பொருட்கள் மற்றும் தாய் தந்தையாகளுக்கான உடுபுடவை என்பன நிறுவனத்தின் உத்தியோகர்த்தர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் குறித்த நிறுவனம் வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பல கிராமங்களுக்கு முதன் முதலாக சென்று இவ்வாறான உதவிப்பொருட்களை வழங்கிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக