சனி, 14 நவம்பர், 2015

மட்டக்களப்பு மாநகரசபையின் மாபெரும் புத்தகக் கண்காட்சி

(எருவில் நிரோஷன்)
தேசிய வாசிப்பு மாதத்தின் ஓர் நிகழ்வாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மாபெரும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் மாநகர நகர மண்டபத்தில் 14.11.2015 தொடக்கம் 16.11.2015 வரை காலை 9.00 மணி முதல் இரவு 8.00 வரை இடம்பெறவுள்ளது. 

இக்கண்காட்சியில் இலங்கையின் புகழ்பெற்ற, பிரபலமான புத்தகசாலையான பூபாலசிங்கம் புத்தக சாலை கலந்துகொள்கின்றது. 10 மற்றும் 25 வீத விலைக்கழிவுகளுடன் இங்கு நீங்கள் புத்தகங்களை கொள்வனவு செய்யலாம்.

கடந்த வருடமும் இதுபோன்ற கண்காட்சி நடாத்தப்பட்டு பெருமளவிலான பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate