புதன், 11 நவம்பர், 2015

குளவி கொட்டியதில் ஆசிரியர் பலி. குருக்கள்மடத்தில் சம்பவம்.

(பழுவூரான்)
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி மரணமடைந்த சம்பவம் ஒன்று நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. திருமலை ஊரியன்கட்டு தமிழ் மகா வித்தியாலய ஆசிரியரான மகாலிங்கம் - ரவி என்பவர் குருக்கள்மடத்தினை பிறப்பிடமாகவும் திருகோணமலை - நிலாவெளி - போபாலபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் உறவினர்களின் திருமண நிகழ்விற்காக திருமலையில் இருந்து குருக்களமடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
இதன்போது அவரின் உறவினர்களின் வீட்டில் உள்ள மாமரமொன்றில் மாங்காய் பறிப்பதற்காக 07.11.2015 ஏறிய போது அதிலிருந்த குளவி கொட்டியதனால் சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைளில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக 09.11.2015 திகதி மட்டு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 10.11.2015 மரணமடைந்துள்ளார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate