(பழுவூரான்)
பழுகாமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் நஞ்சருந்தி தற்கெலை செய்துள்ள சம்பவம் நேற்று குருக்கள்மடத்தில் இடம்பெற்றுள்ளது. பழுகாமத்தை வசிப்பிடமாகவும் குருக்கள்மடத்தை பிறப்பிடமாகவும் கொண்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று நஞ்சருந்தி விட்டு குருக்கள்மடம் காட்டுப்பகுதியில் சடலமாக மக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவித்ததன் பிரகாரம் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரணைகள் களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு பின்னர் நேற்று மாலை சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திக்கோடையில் இரு தற்கொலைச் சம்பவங்கள் நேற்றைய தீபாவளி தினம்......
மட்டு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடையில் நேற்றைய தினம் பாடசாலை மாணவி ஒருவர் அதிக தூக்க மாத்திரைகளினை உட்கொண்டு தற்கொலை செய்துள்ளார். அரசரெத்தினம் ஜெனுஷா எனும் மாணவியே இவ்வாறு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி ரணமடைந்துள்ளார். இது பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றுமொரு சம்பவம் திக்கோடையில் இடம்பெற்றுள்ளது. வயது முதிர்ந்து ஒரு வயோதிபரான கணபதிப்பிள்ளை(88)
நேற்றைய தினம்(10) நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் ஞாயிறு இரவு (09) நடைபெற்றுள்ளதுடன், மறுநாள் அவருடைய படுக்கை அறை சென்று பார்க்கும்பொழுது இறந்த நிலையில் அவரின் அருகில் நஞ்சுப்போத்தல் ஒன்றினையும் கண்டுள்ளனர். பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இதுகுறித்த மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்னர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக