வியாழன், 19 நவம்பர், 2015

மது விற்பனையில் யாழ்ப்பாணம் முதலிடம்; மட்டக்களப்பு இரண்டாம் இடம்!

இலங்கையில் சட்டபூர்வ மது, புகைப் பொருட்கள் விற்பனையின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் மாவட்டங்களாக யாழ்ப்பாணம் முதலிடத்திலும், மட்டக்களப்பு இரண்டாவது இடத்திலும் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
போதை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி ஏற்பாடு செய்திருந்த தேசிய போதைத் தடுப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்ட செயற்பாட்டு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கேகாலை சென். ஜோசப் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மதுபாவனையே பெரிதும் பாலியல் துஷ்பிரயோகம், பாரிய வன்முறை துன்புறுத்தல்களுக்கும் வறுமைக்கும் காரணமாகின்றன. இது தொடர்பிலான சமூகப்பொறுப்பு மிக முக்கியமாகிறது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate