செவ்வாய், 3 நவம்பர், 2015

சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பு

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழுவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கிளேரி மெய்ட்ரவுட் கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட்டின் பணிமனையில் இன்று காலை 11.30 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் முதலமைச்சரின் செயலாளர் அமந்த அபயவிக்கிரம மற்றும் முன்னாள் போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும்,
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆவணங்களை திரட்டுவது தொடர்பாகவும், குறிப்பாக கிரான் பகுதியில் அலுவலகம் ஒன்றினை அமைத்து அதனூடாக கிழக்கு மாகாணத்தில் தமது பணிகளை துரித கதியில் முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடல் நடைபெற்றது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate