மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் மஞ்சள் கோட்டில் நபரொருவரை மோதிட்டு தப்பிச் சென்ற காரிலிருந்து கத்திகள் மற்றும் பொல்லுகள் உட்பட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் காரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி ரி.துஸார தெரிவித்தார்.
இன்று காலை கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த இக் கார் மஞ்சந்தொடுவாய் பிரதான வீதியில் மஞ்சள் கோட்டில் ஒருவரை மோதி காயப்படுத்தி விட்டு தப்பியோடியுள்ளது.
பொலிஸார் துரத்திச்சென்று காரை கைப்பற்றி பரிசோதனை செய்தபோது அதன் பின்புறத்திலிருந்து கத்தி, பொல்லுகள், சங்கிலி, தடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிலிருந்து நால்வரும் கைது செய்யப்பட்டதுடன், கைப்பற்றப்ட்ட நபர்களும் ஆயுதங்களும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக