வியாழன், 5 நவம்பர், 2015

அரச வாடகை வீடுகளில் வசிப்போருக்கு வீட்டுறுதி : பிரதமர் உறுதி

அரச வாடகை வீடுகளில் 10 வருடங்களாக வசித்துவருவோருக்கு நிரந்தர வீட்டுறுதி வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்கள் குறித்து இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிவரும் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச வாடகை வீடுகளில் வசிக்கும் சுமார் 30 இலட்சம் பேருக்கு இவ்வாறு வீட்டுறுதி வழங்கப்படவுள்ளதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகிய இரண்டையும் இணைத்து தேசிய ஒய்வூதிய நலன்புரி நிதியத்தை உருவாக்கவுள்ளதாகவும் பிரதமர் நாடாளுமன்றில் தெரிவித்தார். மேலும், நூல்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் தொடர்பான வரியும் நீக்கப்படவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கத்தின் பொருளாதார செயற்திட்டங்கள் மற்றும் கொள்கைள் குறித்து பிரதமர் இன்று நாடாளுமன்றில் விஷேட உரையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate