மட்டக்களப்பிலுள்ள மதஸ்தலங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டு சர்வமத ஆசீர்வாதத்தினை பெறும் நோக்கில் பௌர்ணமி தினமாகிய இன்று (27) செவ்வாக்கிழமை காலை ஜனாதிபதியினால் மேற்கொள்ள இருந்த மட்டக்களப்பிற்கான விஜயம் சீரற்ற காலநிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விஜயத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கால நிலை அதற்கு இடமளிக்காத சீரற்ற கால நிலைக்கு மத்தியில் இன்றைய நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்றது.
ஜனாதிபதியின் விஜயம் முதலில் மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு சென்று அதன் பின்னர் வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திற்கான விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில் அவரின் வருகை இல்லாதவிடத்தும் திட்டமிட்டபடி விகாரையில் விசேட பிரித் ஒதும் நிகழ்வும் நடைபெற்றுது.
இதன்போது இன்றைய சர்வமத நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் வீ.எம்.சுவாமிநாதன் அத்துடன் இராஜாங்க அமைச்சர்கள் , அமைச்சர் , பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கிழக்கு மாகாண முதலமைச்சர், மாவட்ட செயலாளர் , மாவட்ட செயலக உயரதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக