செவ்வாய், 27 அக்டோபர், 2015

கொக்கட்டிச்சோலையில் வீதி விபத்து தொடர்பான விழிப்புனர்வு - ஸ்டிகர்கள் ஒட்டும் விஷேட நிகழ்ச்சித்திட்டம்.

(த.மயூரன்)

சமூக மட்டத்தில் சிறுவர்களுக்கு ஏற்படும் விபத்துக்ளை தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அபிவிருத்திக்கான ஒன்றினைவு எனும் தொனிப்பொருளில் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு வீதிவிபத்து பற்றிவிழிப்புனர்வு ஏற்படுத்தும் வசனங்கள் அடங்கிய ஸ்டிகர்கள் ஒட்டும் விஷேட நிகழ்ச்சித்திட்டம் கடந்த  (24) சனிக்கிழமை கொக்கட்டிசோலை சந்தைமுன்பாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கொக்கட்டிசோலை பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் தலைமையில் இடம்பெற்றது.

இவ்விஷேட நிகழ்வில் (யுனிசெப்) ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு சர்வோதயத்தின் திட்ட உத்தியோகத்தர் பத்மா உட்பட கொக்கட்டிசோலை பொலிஸ் நிலையத்தின் மோட்டார்போக்குவரத்து பிரிவு பொலிஸ்அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது வீதியால் சென்ற முச்சக்கரவண்டிகளுக்கு வீதிவிபத்து பற்றிவிழிப்புனர்வு ஏற்படுத்தும் ஸ்டிகர்கள் போக்குவரத்து பொலிசாரினாரினால் ஒட்டப்பட்டது.

இங்கு முச்சக்கரவண்டிகளுக்கு ஒட்டப்பட்ட வீதிவிபத்து பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்தும் ஸ்டிகர்களில் வீதிச்சமிஞ்சைகளை மதித்து நடக்கும் சாரதிகளை பாராட்டுகின்றோம் இவீதி ஒழுங்குகளை கடைப்பிடிப்போம் விபத்துக்களை தவிர்ப்போம் ,சாரதிகளே அதிக வேகம் வாழ்வின் ஆனந்தங்களை இல்லாது செய்துவிடும் , சாரதிகளே உங்களின் கவனமின்மை ஊரவரின் உயிரைக்குடிக்கும் போன்ற வசனங்கள் எழுதப்பட்டிருந்தது.












Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate