ஞாயிறு, 8 நவம்பர், 2015

ஐயங்கேணி காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - ஐயங்கேணி காட்டுப் பகுதிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சடலம் நேற்று இரவு சனிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
செங்கலடி - ரமேஸ்புரத்தை சேர்ந்த ஆசிரியரான அழகையா அச்சுதன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஐயங்கேணி மயானத்திற்கு பின் பகுதியில் காணப்படும் காட்டுப் பகுதிக்குள் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே இவரது சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர். 
வாகரை பகுதி பாடசாலை ஒன்றில் சித்திரப் பாட ஆசிரியராக கடமையாற்றுவதோடு , ஆலயங்களில் ஓவியங்கள் வரைவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate