செவ்வாய், 10 நவம்பர், 2015

கஞ்சாவுடன் காத்தான்குடியில் நால்வர் கைது!

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் 1400 மில்லி கிராம் கஞ்சாவுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மகேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்றிரவு பொலிஸார் நடாத்திய தேடுதலின்போது, குறித்த கஞ்சாவை வைத்திருந்த நிலையில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate