மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற புதிய கட்டிட தொகுதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் எதிர்வரும் 13.11.2015ம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற புதிய கட்டட திறப்பு விழா தொடர்பான ஆயத்தங்களினை மேற்கொள்வதற்காக நீதியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜெயமான தலைமையிலான நீதியமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவொன்று கடந்த 27.10.2015 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தது.
இதன்போது திறப்புவிழா தொடர்பான ஆயத்தங்களை மேற்கொள்வது சம்பந்தமாக நீதியமைச்சின் அதிகாரிகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதிபதிகள்,சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் குழுவினருடன் கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத் திறப்புவிழா நிகழ்வில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சர்களும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் நீதியமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதன்போது திறப்புவிழா தொடர்பான ஆயத்தங்களை மேற்கொள்வது சம்பந்தமாக நீதியமைச்சின் அதிகாரிகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதிபதிகள்,சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் குழுவினருடன் கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத் திறப்புவிழா நிகழ்வில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சர்களும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் நீதியமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக