செவ்வாய், 3 நவம்பர், 2015

2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில் ஒருவர் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் 2006ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்தது தொடர்பில் ஒருவரை நேற்று திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சத்துருக்கொண்டான் சர்வோதய பகுதியில் வைத்து 2006 .11 .30 ஆம் திகதி ஐயாத்துரை வாசுதேவன் என்பவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் சத்துருக்கொண்டான் பிரதேசத்தினை சேர்ந்த பா.பார்த்தீபன் என்பவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட நாட்களாக இவர் தேடப்பட்டுவந்த நிலையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர் தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.



இவரது விசாரணையை தொடர்ந்து குறித்த நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate