
வீதிசட்டங்களில் பாடசாலை சீருடை அணிந்தவர்கள், தாதியர்கள் மற்றும்
இரானுவச்சீருடை அயிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என
குறிப்பிடப்படுகின்றது. அதுமட்டுமல்ல இச்சம்பவம் காலையில் பாடசாலை
மாணவர்கள் செல்லும் நேரத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இவ்வாறான நேரங்களில்
சாரதிகள் நிதானத்துடன் செயற்பட வேண்டாமா? மட்டுநகரில் எங்கு பார்த்தாலும்
வீதி போக்குவரத்து பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்
பெரும்பாலானோர் கைகளில் கைத்தொலைபேசிகள்.... அதிகமானோர் நடுவீதியில்
நின்றுகொண்டு அதனைத்தான் நோண்டிக்கொண்டிருக்கின்றார்கள். அல்லது போனால்
மோட்டார் வண்டிகளில் பயணிக்கின்ற பெண்களை நிறுத்தி வழிகின்றார்கள்...
அப்படியுமில்லையா உப்புச்சப்பில்லா காரணங்களுக்கு அபராதப்பணம்
விதிக்கின்றார்கள். இவர்கள் மட்டும் இன்று அந்த வாகனத்தினை நிறுத்து
வேகத்தினை குறைத்திருந்தால் இவ்விபத்து இவ்விடத்தில் நடந்திருக்குமா? பல
பிரபல பாடசாலைகளுக்கண்மையில் இவ்விபத்து இடம்பெற்றிருக்கின்றது.
அடுத்த விடயம் எத்தனை பெற்றோர்கள் குழந்தைகளை அந்த வகுப்பு இந்த வகுப்பு
என்று அனுப்புகின்றார்கள். யாராவது தங்கள் குழந்தைகளுக்கு வீதியில்
பயணிப்பது பற்றி சொல்லிக்கொடுத்திருக்கின்றார்களா?
சாரதியின்
அவசரம், வேகம் வீதிப்பாதுகாப்பு பொலிசாரின் அசமந்த போக்கு இன்றும் ஒரு
குழந்தையை பாதித்திருக்கின்றது.அந்தக்குழந்தை என்ன பாடுபடுகின்றதோ அதன்
எதிர்காலத்திற்கு யார் பொறுப்பு என்கின்ற கேள்விகளை வேதனையுடன்
கடக்கின்றேன்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக