2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69ஆவது வரவு செலவு திட்டத்தினை சமர்ப்பித்து நிதியமைச்சர் தற்போது உரையாற்றுகிறார்.
இதன்போது நாடு பாரிய சிக்கல் நிலையில் இருந்த போதே அரசாங்கத்தை பொறுப்பேற்றுக்கொண்டதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊழல், மோசடிகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் நிறைந்து காணப்பட்ட சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளதோடு நூறு நாள் வேலைத்திட்டத்தில் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது.
பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவுதல் என்பவற்றின் ஊடாக நல்லாட்சியை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்கால சந்ததியினருக்கு பயன்களை அனுபவிக்கும் வகையில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதே இந்த அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
500 மில்லியனை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை முன்வைக்காது பல மில்லியன் திட்டங்களை முன்வைப்பதே சிறந்த திட்டம்.
நீண்ட கால பிரதிலாபம் பெறும் வகையில் விசேட பொருளாதார அடித்தளம், கொண்ட கொள்கை சார்ந்த வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய நல்வாழ்வை முன்னோக்கி கொண்டு செல்ல எதிர்கால தலைமுறையினருக்கு நன்மைகளை அனுமதிக்கக் கூடிய வகையில் பொருளாதாரத்தை உருவாக்குதல் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும்.
கடந்த 10 மாதங்களில் சமூக அரசியல் மற்றும் பொருளாதாரம் பாரிய அளவில் மாற்றமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நாடு பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியதோடு, பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காணமுடியாத நிலை காணப்படுகிறது.
தெற்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் கொலைகளினால் பல்வேறு ரீதியில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
இலங்கைக்கு எதிர்வரும் காலங்களில் அதிகளவிலான வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு வருவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
நாட்டில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்தி பணிகள், விமான நிலையங்களை அமைத்தல் மற்றும் துறைமுகங்களை நிர்மாணித்தல் போன்ற திட்டங்களுக்கு பாரியளவிலான வட்டிக்கு கடன் பெற்றுக் கொள்ளப்பட்டமையானது, பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையை மீள செலுத்த தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்
விமானங்கள் வராத வகையிலான விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டமை மற்றும் கப்பல் வராத துறைமுகங்கள் நிர்மாணிக்கப்பட்டமை நாட்டை பொருளாதார ரீதியில் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது.
அத்துடன், வெளிநாடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பணத்தை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வந்து முதலீடு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், 2014ஆம் ஆண்டு தேசிய உற்பத்தியானது 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் வருமானம், கடனை செலுத்தவே போதுமானதாக அமையாது. இதனூடாக நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்ற முடியாது.
சேமிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. நாட்டின் நிதி கட்டமைப்பில் பாரிய வீழ்ச்சி காணப்பட்டுள்ளமையை நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
காணி, வீடு மற்றும் சுகாதார துறைகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்.
சர்வதேச சந்தை ஊக்குவிப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, சீர்திருத்தப்பட்ட பொருளாதார கொள்கைகளின் படி இலங்கை புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கம் குறைபாடுடைய பொருளாதார திட்டத்தையே பின்பற்றியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் சுதந்திரமான சந்தை செயற்பாடுகளை செயற்படுத்த தேவையான சீர்திருத்தங்களை ஏற்படுத்த முடியும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக