(சித்தாண்டி நிருபர்)
மட்டக்களப்பு சித்தாண்டி சிகண்டி பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் 2015ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்குமேல் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலய முன்றலில் ம.பிறேம்குமார் தலைமையில் நடைபெற்றது.
சித்தாண்டி கிராமத்தின் நான்கு பிரிவுகளிலும் அமைந்துள்ள பாடசாலைகளில் இருந்து சித்தியடைந்த மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் நினைவுச் சின்னங்களும் நிகழ்வின்போது வழங்கி வைக்கப்பட்டது.மட்டக்களப்பு சித்தாண்டி சிகண்டி பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் 2015ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்குமேல் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலய முன்றலில் ம.பிறேம்குமார் தலைமையில் நடைபெற்றது.
இவ்வருடம் வினாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயம், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம், இராம கிருஸ்ண வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் சித்தியடைந்த மாணவர்களை சாதனையாளர்களாக கௌரவிக்கப்பட்டனர்.
வினாயகர் கிராமம் அலைமகள் பாடசலையின் வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு மாணவர்கள் இவ்வருடம் சித்தி பெற்றிருந்தனர்.
குறித்த புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் குறித்த மாணவர்களுக்கு கற்ப்பித்த ஆசிரியர்களையும் கௌரவித்திருந்தமை கௌரவத்திற்குரிய விடயமாக காணப்பட்டது.
சித்தாண்டி சிகண்டி பவுண்டேன் அமைப்பின் பலஅங்கத்தவர்களின் ஒத்துழைப்பு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கிராமத்துக்கான பல்வேறு வழிகளிலும் உதவிகளைசெய்து வரும் நல் உள்ளங்களின் ஒத்தழைப்பு மூலமாக வருடாந்தம் இவ்வாறான நிகழ்வுகளை வருடாந்தம் நடாத்திவருகின்றனர்.
நடைபெற்ற நிகழ்வுக்கு சித்தாண்டி சித்திரவேலாயுதர் பேராலயத்தின் சார்பாக சிவசிஸ்ரீ சி.பாலகிருஸ்ண சிவச்சாரியர் உட்பட பிரதம விருந்தினராக கல்குடா கல்வி வலய பிராதிக்கல்விப் பணிப்பாளர் (கல்வி முகாமைத்துவம்) தினகரன், கௌரவ விருந்தினராக கல்குடா கல்வி வலய ஆசிரியர் வள முகாமையாளர் வை.பஞ்சலிங்கம். ஆலயத்தின் நிருவாகிகள் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வுக்கு வருகைதந்த அதிதிகளினால் சாதனையாளர்களாக கௌவிக்கப்;பட்ட மாணவர்களுக்குரிய நினைவுச் சின்னங்கள் வழங்கி வைப்பாட்டதுடன் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
சித்தாண்டி பிரதேசத்தை மையமாக கொண்டு கிராமம் சார்ந்ததும் அதன் சமூகம் சார்ந்த செயற்பாடுகளையும் செய்துகொண்டுவரும் சித்தாண்டி சிகண்டி பவுண்டேசன் அமைப்பின் செயற்பாடானது கடந்த வருடமும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு சாதனையாளர்களை கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக