செவ்வாய், 21 ஜூலை, 2015

பாடசாலையொன்றின் இரவு நேர காவலாளி இளைஞன் சடலமாக மீட்பு –வெல்லாவெளியில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் பாடசாலையில் இரவு நேரக்காவலாளியாக கடமையாற்றி வரும் இளைஞர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சுடலமாக மீட்க்கப்பட்டவர் சம்மாந்துரையை சேர்ந்த முகமட் சபீன்(23வயது) என வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு கடமைக்கு வந்த குறித்த நபர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் குறித்த சடலம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார்தெரிவித்தனர்.

இதுதொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate