வந்தாறுமூலைப் பிரதேசத்தை சேர்ந்த சிவகுமார் கேமேஸ்வரி, கந்தையா புண்ணியமூர்த்தி ஆகிய இரு குடும்பங்கள் நீண்ட நாட்களாக தங்களது இருப்பிடத்தில் பல குறைபாடுகளுடன் வசித்து வந்தனர். இதனால் இவர்கள் மழைகாலத்தில் உறங்குவதற்கு கூட கடும் பிரச்சினைகளை அனுபவித்து வந்தனர். இதனை அப்பிரதேசத்தின் இளைஞர்கள் சிலர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அவ் இளைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று அவ்விரு குடும்பங்களையும் பார்வையிட்டு அவர்களின் இருப்பிட வசதியினை சீர்படுத்துவதற்கான உதவியை தனது நிதியில் இருந்து வழங்கினார். அதற்கிணங்க அவ்விரு குடும்பங்களின் குறைபாடுடன் காணப்பட்ட இருப்பிடங்கள் சீர்செய்யப்பட்டன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக