இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரத்தில் இரண்டு வயது குழந்தையின் தாய் ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளார்.
இன்று (10) மாலை சுமார் 2.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும், குலேந்திரலிங்கம் கல்பனா (25) என்ற இளம் குடும்ப பெண்ணே தனது வீட்டிற்குள் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்ட அவரது வீட்டிற்குள் விதுசனா என்ற அவரது இரண்டு வயது குழந்தை மாத்திரம் தனியாக அழுதுகொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது வீட்டின் மண்டப அறையிலுள்ள மின் விசிறியில் சாரியினால் சுருக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் காணப்படுவதுடன் சம்பவ இடத்தில் கைத்தொலைபேசி ஒன்று உடைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் கணவர் புல்லுமலைப் பிரதேசத்திற்கு சென்றுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக