ஞாயிறு, 6 டிசம்பர், 2015

2015 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு   செலிங்கோ  லைப்  கிளை  04 இல்  நடத்தப்பட்ட   2015 தரம் ஐந்து  புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது . 

 மட்டக்களப்பு  கல்வி வலயத்தில்   2015  ஆம் ஆண்டு  தரம் ஐந்து  புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களை கௌரவித்து  அவர்களுக்கு  வெற்றி கிண்ணங்களும் , பரிசில்களும் வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு   செலிங்கோ  லைப்  கிளை  04 இன்  முகாமையாளர்  எஸ் .வேனுகரன் தலைமையில் இன்று  மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது .  

இடம்பெற்ற  இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக  மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே . பாஸ்கரன் கலந்துகொண்டார் .

மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை    04  ஏற்பாட்டில்    2015  ஆம் ஆண்டு  தரம் ஐந்து  புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வில்  பிரதம விருந்தினராக கலந்துகொண்ட  வலயக்கல்வி பணிப்பாளரினால்  மாணவர்களுக்கு வெற்றி கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது . 

இந்நிகழ்வில்  செலிங்கோ  லைப்  கிளை  பிராந்திய அபிவிருத்தி  முகாமையாளர் கே . சுமேந்திரன் ,  மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை   மேற்பார்வையாளர்  திருமதி .எம் . சுலோஜினி , மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை   விற்பனை ஆலோசகர் திருமதி .ஜெ .சுமதி  மற்றும்  பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .






















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate