(லியோன்)
மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை 04 இல் நடத்தப்பட்ட 2015 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 2015 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து அவர்களுக்கு வெற்றி கிண்ணங்களும் , பரிசில்களும் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை 04 இன் முகாமையாளர் எஸ் .வேனுகரன் தலைமையில் இன்று மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது .
இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே . பாஸ்கரன் கலந்துகொண்டார் .
மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை 04 ஏற்பாட்டில் 2015 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வலயக்கல்வி பணிப்பாளரினால் மாணவர்களுக்கு வெற்றி கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் செலிங்கோ லைப் கிளை பிராந்திய அபிவிருத்தி முகாமையாளர் கே . சுமேந்திரன் , மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை மேற்பார்வையாளர் திருமதி .எம் . சுலோஜினி , மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை விற்பனை ஆலோசகர் திருமதி .ஜெ .சுமதி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .
0 facebook-blogger:
கருத்துரையிடுக