சனி, 12 டிசம்பர், 2015

சான்றிதழ் பெறுவதில் சிரமம்

மட்டக்களப்பிலுள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தில் மோட்டார் சாரதி அனுமதிப்பத்திரத்துக்காக வைத்தியச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கு வருகை தருவோர் சிரமத்தை எதிர்நோக்குவதாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் பணிப்பாளரிடம் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மோட்டார் சாரதி அனுமதிப்பத்திரத்துக்காக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தில் வைத்தியச்சான்றிதழ் பெறுவது அவசியமாகவுள்ளது.  இதனைப் பெறுவதற்காக அதிகாலை 04 மணிக்கு மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள இந்நிறுவகத்துக்கு வந்து வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இருப்பினும், உத்தியோகஸ்தர்கள் காலை 8 மணிக்கே வந்து சிட்டை வழங்குகின்றனர். அதுவும் ஒரு நாளில் 100 பேருக்கே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இந்த 100 சிட்டைகளுக்குள் அன்றையதினம் தாம் வராவிட்டால், மறுநாள் வந்து வரிசையில் காத்திருக்கவேண்டியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். 

இந்நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்க அதிபர், மட்டக்களப்பு நிறுவகத்தின் அதிகாரி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் உள்ளிட்டோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate