வெள்ளி, 18 டிசம்பர், 2015

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இலவச ஸ்மார்ட் போன்!- அரசு தீர்மானம்

இலங்கையின் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இலவச ஸ்மார்ட் போன்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இலவசமாக ஸ்மார்ட் போன் ஒன்றையும் சலுகைக் கட்டண அடிப்படையிலான டேட்டா பெக்கேஜ் ஒன்றையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிட்டல் உட்கட்டுமான மற்றும் தொடர்பாடல்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தொலைதொடர்பு மற்றும் உட்கட்டுமான அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இலங்கை ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அனைத்து நிறுவனங்களையும் டிஜிட்டல் மயப்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் நவீன தொழில்நுட்பத்தை கிராமங்கள் நோக்கி எடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் திட்டம் எனவும் அவர் கூறினார்.இதேவேளை சிரேஸ்ட பிரஜைகளுக்கு தொலைபேசி ஒன்று வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate