இலங்கையின் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இலவச ஸ்மார்ட் போன்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இலவசமாக ஸ்மார்ட் போன் ஒன்றையும் சலுகைக் கட்டண அடிப்படையிலான டேட்டா பெக்கேஜ் ஒன்றையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிட்டல் உட்கட்டுமான மற்றும் தொடர்பாடல்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தொலைதொடர்பு மற்றும் உட்கட்டுமான அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இலங்கை ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக