வியாழன், 17 டிசம்பர், 2015

கல்லடியில் சட்டவிரோத உணவு வியாபாரம்; பொதுச் சுகாதார பரிசோதகரால் மடக்கிப் பிடிப்பு

மட்டக்களப்பு - கல்லடி பொதுச் சுகாதாரப் பிரிவில் போலி லேபல் ஒட்டப்பட்ட உணவுப்பொருட்கள் உட்பட நடமாடும் உணவு வாகனம் ஒன்றும்  சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.கல்லடிப் பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது, இவை கைப்பற்றப்பட்டதாக கல்லடிப் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் க.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதன்போது 07 தேன் போத்தல்கள், 15 கிழங்கு சீவல் பக்கெட்டுக்கள் மற்றும் மருத்துவச் சான்றிதழ் இன்றியும் அனுமதி பெறப்படாமலும் உணவு தயாரித்து விற்பனை செய்துவந்த நடமாடும் உணவு வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன.இவற்றை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதேவேளை கிழங்கு சீவல் விற்பனை செய்த நபர் இதன்போது தப்பிச்சென்றுள்ளதாக சுகாதார பரிசோதகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate