புதன், 16 டிசம்பர், 2015

குற்றவாளிகள் உருவாகின்றார்களா ..? அல்லது உருவாக்கப்படுகின்றார்களா..? - பாராளுமன்றத்தில் ஞா.சிறிநேசன்

சிறைச்சாலைகள், கைதிகளை சீர்திருத்தமான பாதைக்கு கொண்டு சென்று மீண்டும் குற்றம் செய்யாதவர்களாக, சமுகத்தில் நல்ல பிரஜைகளாக வாழ்வதற்கேற்ற விதத்தில் அமைய வேண்டுமென பாராளுமன்ற குழு நிலை விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கோறிக்கைவிடுத்திருந்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் .......

இவ்விடத்தில் குற்றவாளிகள் உருவாகின்றார்களா ..? அல்லது உருவாக்கப்படுகின்றார்களா..? எனும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதிலும் குற்றவாளிகள் உருவாக்கப்படும் விதத்திலான சட்டங்களை அமைக்கக்கூடாது.. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட சட்டங்களை எடுத்துக்கொண்டால். 1948 இல் உருவாக்கப்பட்ட "பிரஜாவுரிமைச் சட்டம்"., 1949 இல் உருவாக்கப்பட்ட "குடியுரிமைச் சட்டம்"., 1956 இல் உருவாக்கப்பட்ட "தனிச்சிங்கள அரசகரும மொழிச்சட்டம்"., மற்றும் "பயங்கரவாத தடைச் சட்டங்கள்" என்பன இந்த நாட்டில் குற்றவாளிகளை உருவாக்கக்கூடிய விதத்திலேயே அமைந்திருந்தன.. எப்போதும் சட்டங்களை ஆக்கும் போது., குறுகிய சிந்தனைகள் அல்லாமல், நீண்டகால சிந்தனைகளுடன் அமைக்கப்பட வேண்டும்.

இனப்பிரச்சனை என்பது பிரித்தானியர் காலத்தில் 1921 ஆம் ஆண்டிலேயே தொற்றுவிக்கப்பட்டாலும்.1948 இல் சுதந்திரத்துக்கு பிற்பாடு அப்பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு நாம் முன்வரவில்லை.. 1955 இல் "கொக்சி ஆணைக்குழு" மூலமாக அதிகாரப் பரவலாக்கம் பற்றிப் பேசப்பட்டது ஆனாலும் கைவிடப்பட்டது. 1957 ஆம் ஆண்டு "பண்டா செல்வா" ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது அதுவும்  கைவிடப்பட்டது.. 1865 ஆம் ஆண்டு "டட்லி செல்வா"  ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது அதுவும் கைவிடப்பட்டது.. அத்தோடு1981 இல் "மாவட்ட சபை", 1987 இல் "மாகாண சபை" என அனைத்தையுமே எடுத்துக்கொண்டால், தேசிய இனப்பிரச்சனைக்குரிய தீர்வினை  இதய சுத்தியுடன் தீர்த்து வைக்க கூடிய வகையில் அமைய வில்லை. 

இதன் காரணமாகவே புத்தகத்தை ஏந்தி அறிவுப்புரட்சியை ஏற்படுத்த வேண்டிய இளைஞர்கள் ஆயுதப்புரட்சிக்குள் தள்ளிவிடப்பட்டார்கள். இவர்கள் எமது பாரபட்சமான சட்டங்கள் மூலமாகவே உருவாக்கப்பட்டார்கள், கடந்த காலத்தைப்பற்றி பேசி பேசி இருப்பதில் அர்த்தமில்லை ஆகவே நிகழ் காலத்திலேயே எதிர்காலத்துக்கான  தீர்வுகளை நல்லாட்சிக்கான அரசாங்கம் என சொல்லப்படுகின்ற இவ் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். சிறைச்சாலைகளில் வழங்கப்படும் தண்டனைகள் பழிக்கு பழி வாங்குபவைகளாக இருக்கக்கூடாது. அவர்களை சீர்திருத்தி சமுகத்துடன் இணைத்து சமுகத்தில் நல்ல மனிதர்காளாக வாழ வழி சமைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஜனநாயக வழியிலான போராட்டங்கள் அரவளிப்போரட்டமாக, அகிம்சை வளிப்போராட்டமாகவே அமைந்திருந்தன ஆனால் பிரச்சனைகளுக்கான சரியான தீர்வினை எடுக்காததனாலேயே ஆயுதப்போராட்டமாக மாற்றம் பெற்றது. 

1971 ஆம் ஆண்டுகளில் ஜே.வி.வியினர் ஒரு புரட்சியை மேற்கொண்டிருந்தார்கள்., 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளிலும் மற்றுமொரு போராட்சியையும் மேற்கொண்டிருந்தார்கள். இன்று அவர்கள் ஜனநாயக வளிப்படுத்தப்பட்டு இன்று ஆரோக்கியமானதும், ஆக்கபோர்வமானதுமான கருத்துக்களை இந்த மன்றில் வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்களை அன்றே அழித்திருந்தால் இன்று ஆக்கபுர்வமான பல கருத்துக்களைத்தான் நாம் கேட்டிருக்க முடியுமா..? 

ஒரு காலத்தில் சேபால ஏக்கநாயக்க என்பவர் இத்தாலிய நாட்டுக்கு சொந்தமான விமானத்தை கடத்தி இலங்கைக்கு கொண்டுவந்தார்.,ரோகண விஜயமுனி என்பவர் பாரத பிரதமரை தாக்கி கொலை செய்ய முயன்றார்.. அப்படிப்பட்டவர்களுக்குக் கூட பொது மன்னிப்பு வழங்கப்பட்டது .. இது  போலவே தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும்.. 

இன்றும் கூட மகசின் சிறையில் 6 நாட்களுக்கும் மேலாக இருவர் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்கள். அதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றில் இவரது  வழக்கு விசாரணைக்காக எடுக்கப்படுகின்ற போது ஆறு ஆண்டுகளாகவே ஒரு உதவிப் போலிஸ் அத்தியேட்சகர் (ASP) பிரசன்னம் ஆகாமல் இருப்பதனாலேயே இந்த தாமதமும், தண்டனையும். வெறும் பழிவாங்கல்களின்  ஊடாக நாம் எதையும் சாதிக்க முடியாது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate