புதன், 16 டிசம்பர், 2015

2016ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!

இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிகொண்டிருக்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல பயிற்சி நிலையங்களில் நடாத்தப்படவிருக்கின்ற 2016 ஆண்டு ஒரு வருட, ஆறு மாத கசால பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 


தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் தேசிய சான்றிதழ் - அலங்கரிப்பாளர் பொறிவல்லுனர் (கணணி எண்முறைக் கட்டுப்பாடு) மோட்டார் சைக்கிள் திருத்துனர் மரக்கைவினைஞர் குளீருட்டலும் வளிசீராக்கலும் வானொலி, தொலைக்காட்சி மற்றும் அவை சார்ந்த உபகரணங்கள் திருத்துனர் மின்னியலாளர் (தொழிற்சாலை வீட்டு மின் இணைப்பாளர் ( தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் நீர்க்குழாய் பொருத்துனர் தொழில்சார் தையல் (பெண்கள், சிறுவர்கள் போன்ற பல பயிற்சிநெறிகள் பயிற்றுவிக்கப்படவிருக்கின்றன.



எனவே இளைஞர் யுவதிகள் குறிப்பிடப்படுகின்ற பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 
விண்ணப்பங்களை குறிப்பிட்ட பயிற்சி நிலையங்களில் பெற்றுக்கொள்ளமுடியும் பெற்று அவற்றை பூரணப்படுத்தி அதே பயிற்சி நிலையங்களில் ஒப்படைக்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என உதவிப்பணிப்பாளர், - தேசிய தொழிற்பயிற்சி நிறுவகம், வந்தாறுமூலை 0652240159 கேட்டுக்கொள்கின்றார்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate