செவ்வாய், 1 டிசம்பர், 2015

யானை ஒன்று இறந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

(பழுவூரான்)
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திக்கோடை மண்டூர் 38ம் கிராமத்தில் நேற்றைய (30.11.2015) தினம் யானை ஒன்று இறந்து கிடப்பதனை கண்ட பிரதேவாசிகள் அப்பிரதேசத்தில் உள்ள வன ஜீவராசிகள் சுற்றுவட்டார திணைக்களத்திற்கு அறிவித்தனர். அவ்விடத்திற்கு விரைந்த உத்தியோகஸ்தர்கள் அது 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்று வன ஜீவராசிகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சுற்றுவட்ட அதிகாரி என்.சுரேஸ்குமாரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது 'இந்த யானை என்ன காரணத்தினால் இறந்தது என்று இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக வைத்தியருக்கு அறிவித்துள்ளதாகவும், பிரேத பரிசோதனையின் பின்னர் தான் யானையின் இறப்புக்கான காரணம் சரியான முறையில் தெரிவிக்கலாம்  தெரிவித்தார். அண்மைக் காலமாக இந்த காட்டுயானைகளினால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate