அம்பாறை திருக்கோவில் பிரதேச சகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்பளுவென்சா AH1N1 வைரஸ் (பன்றிக் காய்ச்சல்)நோய் தாக்கத்தில்; இருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு செயற் திட்டங்கள் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் நேற்று (22) திருக்கோவில் சகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.உதயசூரியா தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு தங்களது அலுவலகத்திற்கு முன்பாக வீதியில் பொது மக்களை விழிப்பூட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக