இலங்கையில் பிறந்து இங்கு சிங்களத்தில் பேசத்தெரியவில்லை என்பது எனக்கு வருத்தமல்ல. அது நாட்டின் விதி. சிங்களம் படிப்பது ஒன்றும் இமயத்தைப்பிளக்கும் வேலையல்ல.
இவ்வாறு கிழக்குமாகாண விவசாய நீர்ப்பாசன கால்நடை அபிவிருத்தி கூட்டுறவு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சரும் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம் காரைதீவில் உரையாற்றுகையில் முழக்கமிட்டார்.
கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு காரைதீவு கால்நடைஅபிவிருத்திப்பிரிவு காரியாலயத்தில் அம்பாறை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எம்.நதீர் தலைமையில் சனியன்று நடைபெற்றது.
நிகழ்வில் கிழக்குமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் த.சிவநாதன் கிழக்குமாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் உள்ளிட்டோர் கலந்துசிறப்பித்தனர்.
அங்கு அமைச்சர் துரைராஜசிங்கம் மேலும் உரையாற்றுகையில்:
1956இல் தனிச்சிங்களச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது பாராளுமன்றில் உரையாற்றிய ஆளும்கட்சி உறுப்பினரொருவர் “சிங்களத்தை தமிழர்களின் தொண்டையில் திணிப்போம் “என்று ஆக்ரோசத்துடன் கூறினார். அப்போது எதிர்கட்சி ஆசனத்திலிருந்த தமிழரசுக்கட்சி உறுப்பினர் அமிர்தலிங்கம் “அப்படி நீங்கள் சிங்களத்தை தொண்டையில் திணித்தால் அதனை மீண்டும் உங்களது முகத்தில் காறித்துப்பிவிடுவோம் “ என்றார்.
எனவே எந்த மொழியையும் திணிக்கக்கூடாது. அவர்களாக விரும்பிப்படிக்கவேண்டும்.
எனவே எந்த மொழியையும் திணிக்கக்கூடாது. அவர்களாக விரும்பிப்படிக்கவேண்டும்.
சால்வை போட்ட இனவாதி!
அண்மையில் ஜனாதிபதி பேசுகையில் “ கபடத்தனமான அரசியல்வாதிகளுக்கு கடைசிப்புகலிடம் தேசப்பற்று” என்று குறிப்பிட்டார். உண்மைஅதுதான்.
தமிழ்ச்சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்படவேண்டும் என்று பல்லாண்டுகாலமாக நாம் குரல் கொடுத்து வருகின்றோம். சரத்பொன்சேகா முதல் ரத்னஎலிய தேரர் வரை கைதிகள் விடுதலைசெய்யப்படவேண்டும் என்று கூறுமளிவிற்கு இவ்விடயம் அநீதியானதென்பது சகலருக்கும் தெரிந்து விட்டது.
எனினும் பாராளுமன்றில் பாதீட்டு உரையின்போது பேசிய சால்வைபோட்ட அரசியல்வாதி “தமிழ்க்கைதிகளை விட்டால் நாடு அழிந்துவிடும்” என்று இனவாதத்தைக் கக்குகின்றார்.
இன்னமும் இவ்வாறான அரசியல்வாதிகள் இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருப்பானார்களானால் ஈழமாதா வேதனைப்படுவாள்.
குட்டிமணி ஜெகன் உள்ளிட்டவர்களின் வழக்குத்தீர்ப்பின்போது நீதிபதி கூறுகையில் நாட்டிலுள்ள ஒவ்வொரு இளைஞனும் சொத்துக்கள் என்றார். ஆம் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சொத்துதான்.
அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசினுடைய கடமை.
இத்துப்போன கதை!
இன்னமும் இனவாதம் பேசி நாட்டைச் சீரழிக்காமல் நிம்மதியாக வாழ சகல இனங்களும் ஒற்றுமையாக வாழ சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.
அதைவிட்டுவிட்டு இன்னமும் இத்துப்போன கதைகளை மாணவருக்கு பாடம் புகட்டி இனவாதத்தை விதைத்துவருகின்றார்கள்.
அதாவது துட்டகைமுனு எனும் அரசன் கட்டிலில் சுருண்டு படுக்கிறானாம். அவனது தாய் விகாரமாதேவி அவனிடம் ஏன் மகனே இப்படி சுருண்டுகிடக்கிறாய் நீட்டி நிமிர்ந்து படுக்கலாமே? என்று கேட்டாராம்.
அதற்கு துட்டகைமுனு காலை நீட்டி நிமிர்ந்து த்துபடுக்கமுடியவில்லை ஏனென்றால் ஒரு பக்கம் இந்துசமுத்திரம் மறுபக்கம் தமிழர்கள். அதனால்தான் சுருண்டு படுக்கிறேன் என்றானாம். எப்படிக் கதை? வரலாற்றை திரிபுபடுத்தி குரோதத்தை வளர்க்கிறார்கள்.
தமிழாகள் என்ன நாட்டைக் கபளீகரம் செய்ய வந்தவர்களா? என்று கேட்கின்றேன்.
நாட்டின் முதல்பயங்கரவாதிகள் ஜே.வி.பியினர்தான்!
அரசகொள்கைகளுக்கு மாறாக யார் செயற்படுகின்றார்களோ அவர்கள் பயங்கரவாதிகள். இதுதான் வரைவிலக்கணம். அப்படிப்பார்த்தால் நாட்டின் முதல் பயங்கரவாதிகள் ஜேவிபினர்தான்.
தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலாவும் பயங்கரவாதிதான் . ஊவா வெல்லஸ்ஸ புரட்சியில் போராடிய புரன்அப்பு பயங்கரவாதியாக வர்த்தமானிப்பிரகடனம் செய்யப்பட்டான். அதனை 2008 2009 இல்தான் விலக்கினார்கள். அதன்பின்னர் அவர் தேசிய வீரராகப்பிரகடனம் செய்யப்பட்டார். இதுதான் வரலாறு.
தமிழ்க்கைதிகள் விவகாரம்?
கே.பி, கருணா, பிள்ளையான் எல்லாம் அரசோடு இருக்கிறார்கள். அவர்களுக்காக பணியாற்றியபிள்ளைகள் சிறையில் வாடுகின்றனர். 10 சாப்பாட்டுப் பார்சல்களை வழங்கியதுதான் இவர்கள் செய்த குற்றமாகும்.
சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்படவேண்டும் என்ற விடயத்தில் பிரதமமந்திரி எதிர்க்கட்சித்தலைவர் ஜனாதிபதி வரை சகலரும் ஒரேநிலைப்பாட்டிலுள்ளனர். தற்சமயம் சட்டமாஅதிபரிடம் விடயமுள்ளது.
சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்படவேண்டும் என்ற விடயத்தில் பிரதமமந்திரி எதிர்க்கட்சித்தலைவர் ஜனாதிபதி வரை சகலரும் ஒரேநிலைப்பாட்டிலுள்ளனர். தற்சமயம் சட்டமாஅதிபரிடம் விடயமுள்ளது.
நீதிபதிகளுக்கும் விடயம் தெரியும் எனினும் சட்டத்தின்படிதான் தீர்ப்பு நீதி வழங்கவேண்டும்.
மாணவன் செந்தூரனின் தியாகம் சாதாரணமானதல்ல. அவரது மரணத்த்pலிருந்து பல செய்திகள் வெளிவந்துள்ளன.
மாணவன் செந்தூரனின் தியாகம் சாதாரணமானதல்ல. அவரது மரணத்த்pலிருந்து பல செய்திகள் வெளிவந்துள்ளன.
அரச பங்கீடுகள் சமமானதாக இருக்க வேண்டும்!
அரச பங்கீடுகள் சரியாக சமமாக நீதியாகப் பங்கிடப்டவேண்டும். சமநிலைப்பங்கீடுகள் மறுக்கப்பட்ட காரணத்தினால்தான் சிலகாலம் நாடு சின்னாபின்னமானது. ஏன் கிழக்குமாகாணத்தில் கடந்த ஆட்சிக்காலத்திலும் இந்த சமநிலையற்ற பங்கீடு இடம்பெற்றது. இனி அது ஒருபோதும் நடைபெற இடமளியோம்.
மசுர் மௌலானாக்கு அஞ்சலி!
தமிழரசுக்கட்சி பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணி பின்னர் தமிழத்தேசியக்கூட்டமைப்பு என பெயர்மாற்றம் பெற்றுவந்தபோதிலும் கொண்ட கொள்கையில் இலட்சியத்தில் மாற்றமுறவில்லை.
1960களில் அம்பாறையில் சிங்களக்குடியேற்றம் தமிழத்தலைவர்கள் இங்குவந்து முஸ்லிம் தலைமைகளை தட்டிஎழுப்பி எழுச்சிப்போராட்டத்திலீடுபட்டனர்.
தமிழ்முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்துதான் அன்று எழுச்சிப்போராட்டத்திலீடுபட்டார்கள். அதில் பங்கெடுத்த மூத்த போராளிதான் மசூர் மௌhலானா.அவர் இன்றில்லை. ஆனால் அவருக்காக நாம் அஞ்சலி செலுத்தி துக்கம் அனுஸ்ட்டித்தோம்.
நாம் இன்னமும் விழிக்காவிடின் தொடர்ந்து விழித்துக் கொண்டிருக்க வேண்டி வரும்.
இலங்கையர்கள் இல்லையே!
நாட்டில் தமிழர் உள்ளனர் சிங்களவர் ;உள்ளனர் முஸ்லிம்கள் உள்ளனர். இவர்கள் வேற்றுமை பாராட்டி வேறுபட்டுவாழ்ந்த காரணத்தினால் அனுபவித்ததை நாமறிவோம். ஆனால் தேசப்பற்றுள்ள இலங்கையர் இல்லை. அதுதான் இன்றைய பிரச்சினை. இலங்கையர்கள் வேண்டும்.
இலங்கையை நேசிக்கும் இலங்கையர் வந்தால் மட்டுமே இலங்கை இலங்கையாக இருக்கும். நிம்மதியாக சமாதானமாக வாழும்.
தாய்த்தமிழகம் தண்ணீரில் மிதக்கிறது!
இயற்கையை நாம் பேணினால் இது எம்மைப்பேணும். மாறாக தலைக்கனம் பிடித்து இயற்கையை பேணாமல் அலைந்தால் இயற்கை எம்மை எச்சரிக்கும். தற்காலத்தில் அது அடிக்கடி எச்சரிக்கிறது. நாம் இன்னமும் திருந்தாவிட்டால் அழிவைத்தடுக்கமுடியாது.
எமது தாய்த்தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கிறது. சோகமாகவிருக்கிறது. ஆனால் மனிதனின் செயற்பாடுகளே இப்படியான இயற்கையின் சீற்றத்திற்குக்காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
எமது அமைச்சுகளும் இயற்கையோடு இயைந்த அமைச்சுகள். எனவே அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் இயற்கையை மிகவும் கவனமாகக்கையாளவேண்டிய கட்டாயத்திலுள்ளீர்கள்.
பன்மைத்துவநாடு என்றுகூறிய முதல் ஜனாதிபதி!
கடந்த சுதந்திர வைபவத்தில் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால பேசுகையில் இந்த நாடு பன்மைத்துவமிக்க நாடு என்று குறிப்பிட்டார். நாம் ஒன்றிணைந்துவாழும்போதே சந்தோசம் வரும். தேசியகீதத்தை அன்று நாம் விரும்பிப்படிப்பதில்லை. காதில் கேட்பதில்லை. காது விரும்பினால்தான் அதனை கேட்கும்.
ஆனாலின்று தேசியகீதத்தை தமிழில் பாடும்போது எவ்வளவு இனி;மையாகவுள்ளது. எத்துணை அர்த்தம் ! இயலுறு பிளவுகளை மறந்து ஒன்றாக வாழ்வோம் என்பதனை அழகாகச் சொல்கிறது.
காரைதீவு நிருபர் சகா-
0 facebook-blogger:
கருத்துரையிடுக