வியாழன், 29 அக்டோபர், 2015

கிழக்கு பல்கலைகழத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மீரியபெத்த மண்சரிவின் முதலாம் ஆண்டு நினைவஞ்வலி

மண்சரிவின் முதலாம் ஆண்டு நினைவஞ்வலி நிகழ்வு இன்று (29) வியாழக்கிழமை மிகவும் உணர்வுபூர்வமாக கிழக்கு பல்கலைகழக மாணவர்களினால் பல்கலைகழக கலைகலாசார பீட கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

'மறைந்தவர் மறைவழி சந்தி பெறவும், மரணத்துயரினால் மலைத்து நிற்கும் குடும்பம் மனக்கவலை நீங்கி நிம்மதி பெற்றிடவும் மரணித்தவர் ஆத்மா சந்திபெறவும் பிரார்த்திக்கின்றோம்' என மீரியபெத்த மக்களுக்கான முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியும் அகவணக்க நினைவுச் சுடர் தீபமும் ஏற்றப்பட்டு நடைபெற்றது.

நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளரும் சிரேஸ்ட மாணவ ஆலோசகர் மு.ரவி மற்றும் ஏனைய விரிவுரையாளர்களும் கலந்துகொண்டு தங்களின் அக வணக்கத்தை செலுத்தினர்.

பல்கலைகழக மாணவர்கள் மற்றும் மாணவிகள் என பலர் இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி தங்களின் உணர்வுபூர்வமான நினைவலைகளை வெளிக்காட்டினர். 







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate