வெள்ளி, 30 அக்டோபர், 2015

மட்டு. மாநகரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி

 தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி மட்டக்களப்பு பொது நூலகத்தில் 07.11.2015 – 08.11.2015 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வை மட்டக்களப்பு பொது நூலகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து நடாத்தவுள்ளன.
இக்கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர்களின் நூல்கள் மாநகர சபையினால் கோரப்படுகின்றன. வழங்கப்படும் நூல்கள் கண்காட்டி முடிவில் திருப்பி வழங்கப்படும்.

நூல்களை வழங்க விருப்புவோர் மட்டக்களப்பு பொது நூலகத்தில் 06.11.2015 இற்கு முன்னதாக வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். 


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate