விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது நாட்டை மீண்டும் யுத்தத்தை நோக்கி தள்ளும் நடவடிக்கை என இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சில கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை கையளிக்க இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாகதீப என்ற பெயரை வடக்கு மாகாண சபை நயினாதீவு என்று மாற்றம் செய்தால், அது நாட்டை இனவாதத்தை நோக்கி இட்டுச் செல்லும் நடவடிக்கையாகும்.
மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வதானது நாட்டை மீணடும் யுத்தத்தை நோக்கி தள்ளுவதாகும்.
அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, தவறு செய்திருந்தால் தண்டனை வழங்க வேண்டும். தவறு செய்யவில்லை என நிரூபிக்கப்பட்டால் விடுதலை செய்யலாம்.
கே.பி, கருணா ஆகியோரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக