வியாழன், 19 நவம்பர், 2015

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்கலைகழகத்திகு நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார கற்கைகள் பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட பல்கலைகழகத்திற்கு நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் தெரிவித்தார்.


கடந்த மாதம் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற அசாதாரண குளப்ப நிலை காரணமாக குறித்த கற்கை பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை சிறிது காலம் இடை நிறுத்தப்பட்டிருந்தபோதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20.11.2015) குறித்த பீட மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பமாகும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


பல்கலைக்கழக குறித்த இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு நுளைவதற்கான தடை உத்தரவு பல்கலைகழக நிறைவேற்று  அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய நீக்கப்பட்டுள்ளது.

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate