பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் சந்தேகத்தின் பேரில் நேற்று (03) வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட பல பொருட்களும் கைப்பபற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐந்து கையடக்கத் தொலைபேசிகள், டோச்லைட் ஆகியன சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (04) வழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக