அரசாங்க ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்றனர். ஆகவே மக்களுக்காக அவர்கள் கடமையாற்ற வேண்டியவர்கள்.
அவர்களிடமிருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள மக்களுக்கு உரிமையுண்டு. அதற்காக இலஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் கேட்டால் அது தொடர்பில் 1954 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிட முடியும் இவ்வாறு இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் டயஸ் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் அரச நிறுவனங்களுக்குச் சென்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். எமது ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் மாற்றங்களை உருவாக்கி வருகின்றோம்.
இலஞ்சம் மற்றும் ஊழலை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்காக நாம் செயற்பட்டு வருகின்றோம். உயர்மட்டத்திலுள்ள இவ்வாறான விடயங்களை கையாள புதிய குழுவொன்று உருவாக்கியுள்ளோம். பொதுமக்கள் எங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு தந்தால் எங்களால் வெற்றிகரமாக செயற்படமுடியும் என்றார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக