சனி, 5 டிசம்பர், 2015

அகில இலங்கை இந்துமா மன்றத்தின் 60ஆவது ஆண்டு மாநாடு மட்டக்களப்பில் ஆரம்பம்!

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு  சிவதொண்டர் மாநாடு, நாவலர் நினைவு ஆன்மிக எழுச்சிக் கருத்தரங்கு ஆகியன இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு, சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன அரங்கில் ஆரம்பமானது.
இதனை முன்னிட்டு கல்லடி உப்போடை பேச்சியம்மன் ஆலயத்திலிருந்து ஆன்மிக எழுச்சி ஊர்வலம் ஆரம்பமாகி, சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் அரங்கை சென்றடைந்த பின்னர் பிரதான  நிகழ்வுகள் ஆரம்பமானது.

மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை மற்றும் கிழக்கு பல்கலைக்கழக இந்து மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வுகளில் இந்தியாவின் இளையவட்டம் பேரூர் ஆதினம் வணக்கத்துக்குரிய சீர்வளர்சீர் மருதாசல அடிகளார், நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள், மட்டக்களப்பு இரதமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தஜி மகராஜ் ,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன் ஆய்வாளர்கள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள், தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள், சமூகத்தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.





















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate