சனி, 5 டிசம்பர், 2015

வாகரை காயாங்கேணி கீரிகுடா வீதியின் நிலைமை படுமோசம்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காயாங்கேணி கீரிகுடா கடற்கரை வீதி மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுவதுடன் பருவமழை காலங்களில் வீதிகளில் வெள்ளநீர் தேங்கிக் இருப்பதால் மக்கள் போக்குவரத்துக்கு மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.




வாகரை பிரதான வீதியில் இருந்து கடற்கரை நோக்கி செல்லுவும் இவ் வீதியில் பயணிக்கும் பெருமளவான மீனவர்கள் உட்பட இவ் வீதியில் அமைந்துள்ள உல்லாச விடுதிக்கு வருகின்ற வெளிநாட்டு உல்லாச பயணிகள் பெரும் அசௌகரியாயத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.


இவ் வீதியில் புதிதாக அமைக்கபட்ட தொழில்சாலை ஒன்றின் தேவைக்காக இவ் வீதியால் கனகரக வாகனகள் தொடர்ந்தும் பயணிப்பதால் இவ் வீதி மோசமாக பாதிக்கபட்டுள்ள தாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இவ் வீதியை புனரமைத்து தருமாறும் அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate