மட்டக்களப்பில் நடைபெற்று வரும் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமானது.
மட்டக்களப்பு, சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன அரங்கில் இந்துமாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை மற்றும் கிழக்கு பல்கலைக்கழக இந்து மாணவர் ஒன்றியம் ஆகியவை மேற்கொண்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் இந்தியாவின் இளையவட்டம் பேரூர் ஆதினம் வணக்கத்துக்குரிய சீர்வளர்சீர் மருதாசல அடிகளார், நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மட்டக்களப்பு இரதமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தஜி மகராஜ் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக